
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெல்லலாம் என முதல்முறையாக நிரூபித்து காட்டியவர் தோனி தான். 2011இல் அவர் காட்டிய பிறகு 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போன்ற அணிகள் சொந்த மண்ணில் கோப்பை வென்றன.
அதே போன்ற வாய்ப்பு தான் இந்தாண்டு இந்தியாவுக்கும் வந்துள்ளது. தோனியை போல ரோஹித் சர்மாவும் செய்துக்காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்றார் போல இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்துவிட்டது. நியூசிலாந்து தொடரில் 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் என்னதான் சொந்த மண்ணில் விளையாடினாலும் இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “2019 உலகக்கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் இந்தியாவின் ரெக்கார்ட்கள் அட்டகாசமாக உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பெரும்பாலான அணிகளை வீழ்த்திவிட்டது. அதாவது தற்போது வரை 14 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 70 - 80 ஆக உள்ளது.