
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹோபார்ட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சல்மான் ஆகா அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஃபர்ஹான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த பாபர் ஆசாம் -ஹசீபுல்லா கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹசீபுல்லா கான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், கேப்டன் ஆகா சல்மான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 41 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.