
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று பாகிஸ்தான் அணி. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது லீக் சுற்று போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்திய அணியிடம் அடைந்த படுதோல்வியின் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுடனே நடையைக் கட்டியது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் ஆசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாபர் ஆசாமின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து பல முன்னாள் வீரர்க தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.