
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் நடைபெற்றவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் அணியானது இந்த தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம், ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது, இத்தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்த தொடரில் பாபர் ஆசாம் 87 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற இந்திய அணியின் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார்.