
உலகக்கோப்பை தொடரின் 9ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகித் 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களையும் வீழ்த்தினார்.இதன்பின் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபாரமான சதத்தால் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடுய ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களும், விராட் கோலி 56 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், தோல்விக்குப்பின் பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “இந்தியாவின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. எனவே நாங்கள் குறைந்தபட்சம் 300 ரன்கள் ஆவது எடுப்பதற்கு திட்டமிட்டு இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது.