
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த வங்கதேச அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் வங்கதேச அணியின் அனுபவ வீக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது தனது சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், "இன்று முதல் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது, அதனால் இந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.