
பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இளம் வீரர்கள் ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், அப்துல் சமாத், இர்ஃபான் நியாசி ஆகியோருடன் அனுபவ வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃபிர்டி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவூஃப் ஆகியோரும் டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.