Advertisement
Advertisement
Advertisement

அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!

ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வுகுழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 14, 2023 • 17:57 PM
 BCCI Asks Ravindra Jadeja To Play At Least One Domestic Game In Order to Prove Fitness-Report
BCCI Asks Ravindra Jadeja To Play At Least One Domestic Game In Order to Prove Fitness-Report (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். எனினும் ஜடேஜா நினைத்தது போல் அவ்வளவு எளிதாக தற்போது அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், அக்சர் பட்டேல் , குல்தீபி யாதவ் ஜோடி சிறப்பாக பந்து வீசி அசத்தியது. குறிப்பாக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், டி20, ஒருநாள் என தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அக்சர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா ஐந்து மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவது மூலம் அவருடைய ஃபார்ம் எவ்வாறு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

Trending


இதனால் பிசிசிஐ ஜடேஜாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் காரணமாக தற்போது ஜடேஜாவுக்கு தேர்வு குழு உறுப்பினர்கள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது முழு உடல் தகுதியை எட்டிய பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதில் ஜடேஜா எவ்வாறு செயல்படுகிறார். அவருடைய பழைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எடுபடுகிறதா என்பதை பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இடம் பெறுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை ஜடேஜா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா இந்திய அணியின் சேர்க்கப்பட்ட போது அவர் போட்டியில் பங்கேற்காமல் மனைவிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது பிசிசிஐ உள்ள தேர்வு குழுவினரை அதிருப்தி அடைய செய்தது. தற்போது ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டிய நிலையில் அவர் அணிக்கு திரும்பும் பாதை கடினம் ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிசிஐ தற்போது எடுத்த முடிவு போற்றுதலுக்கு கூறியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் ,அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் கூடுதல் வீரராக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்குகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement