
BCCI official on Form out players (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் சீசன் தொடர் 50 லீக் போட்டிகளை கடந்து தற்போது ப்ளே ஆஃப் சுற்றை எட்டி வருகிறது. இந்த சீசனில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா போன்ற அணிகள் சொதப்பி வருகின்றன.
சாம்பியன் அணிகள் தான் சொதப்புகின்றன என்று பார்த்தால், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலரும் சொதப்பி வருவது தான் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்களான இஷான் கிஷான், ரோகித் சர்மா இருவருமே ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். கே.எல்.ராகுல் ஓரளவிற்கு தான் அதிரடி காட்டுகிறார்.
மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் போன்றவர்களும் தற்போது வரை பழைய ஸ்ட்ரைக் ரேட்டிற்கு வரவில்லை. ஃபினிஷர்களில் இன்னும் மோசமாக ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். அவர் டாப் ஆர்டரில் களமிறங்கிய போதும், பெரிதாக ரன் அடிக்க முடியவில்லை.