
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அகியோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரும் அணிக்கு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இதுதவிர அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முதல் ஒருநாள் தொடராகவும் இது அமையவுள்ளது.
இப்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசும் கணொளியைப் பதிவுசெய்துள்ளது. அக்காணொளியில் பேசியுள்ள ரோஹித் சர்மா, “என்ன ஒரு மாதம். வேடிக்கையாக இருந்தது. வரலாற்றில் பொறிக்கப்பட்ட சில நினைவுகளுடன் இத்தொடரை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
#TeamIndia | #SLvIND | @ImRo45 pic.twitter.com/jPIAwcBrU4
— BCCI (@BCCI) August 2, 2024