
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்சியளித்தது.
பின்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருட்டி 46 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 100 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, பாட் கம்மின்ஸ், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.