
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு ஒரே அரைசதத்தை மட்டுமே பதிவுசெய்துள்ளார். இதனால் அவரின் பேட்டிங் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.