ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தனித்தனியாக அறிவித்தது பிசிசிஐ. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. டி20 உலககோப்பைக்கு முன்பாக காயமடைந்த பும்ரா தற்போது குணமடைந்துவிட்டார் என பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகாடமி அறிக்கையில் தெரிவித்தது. ஆனாலும் ஏன் அவரை எடுக்கவில்லை என்கிற கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்து அதற்கான தகவல்கள் வந்துள்ளது.
புதிய தேர்வுக்குழு நியமிக்க இன்னும் கால தாமதம் ஆவதால் ஏற்கனவே இருந்த சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடக்கவிருக்கும் தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்ய பொறுப்பு கொடுக்கப்பட்டது.