Advertisement

காயத்திலிருந்து குணமடைந்தார் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 17, 2022 • 11:51 AM
Bumrah is getting fully fit ahead of home season!
Bumrah is getting fully fit ahead of home season! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்வியுடன் வெளியேறியது. இதற்கு காரணம் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாதது தான். இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்குள் வந்த அவருக்கு காயத்தின் தன்மை அதிகரித்ததால் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இந்திய அணி டி20 உலகக்கோப்பைத் தொடரின் அடைந்த தோல்விக்கு பின், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என தோற்றது.

Trending


தற்போது வங்கதேசத்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-1 என்ற கணக்கில் தோல்விகளை சந்தித்து ஏமாற்றியிருக்கிறது. இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ள அட்டவணையை தற்போது பிசிசிஐ சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதில் டி20 தொடர் ஜனவர் 3, 5, 7 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் ஜனவரி 27, 29, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

5 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 2 என இந்தியா வெற்றி கண்டது. இதன்பின்னர் தற்போது தான் இரு அணிகளும் இந்தியாவில் மோதுகின்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்பதால், அனைத்து சீனியர் வீரர்களும் காயத்தில் இருந்து வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். குறிப்பாக பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெல்வது கடினம். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து பூரணமாக குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பும்ராவை விளையாட அனுமதிக்கலாம் என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது. பும்ரா இந்திய அணிக்கு திரும்பும்பட்சத்தில், இந்திய அணியின் பந்துவீச்சு மேலும் வலிமைபெறும் என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement