Advertisement

ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 14, 2025 • 08:41 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) மார்ச் 23 அன்று சென்னையில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 14, 2025 • 08:41 PM

ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்றுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இத்தொடர் ஆம்பிம்பதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. 

Trending

அதன்படி அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயம் காரணமாக இத்தொடரின் சில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ரா தனது முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தாஅர். இதனால் அவர் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் விலகினார். 

மேற்கொண்டு ஜனவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ​​​​பிசிசிஐ மருத்துவக் குழுவால் பும்ராவுக்கு குறைந்தது ஐந்து வாரங்களாவது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெளிவாகக் கூறியிருந்தார். ஆனால் அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் குணமடையாத காரணத்தால், இறுதி நேரத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் ஜஸ்பிரித் பும்ரா, பிசிசிஐ மருத்துவ குழுவிடம் இருந்து முழு உடற்தகுதியை எட்டியதற்கான அனுமதியைப் பெறும் பட்சத்தி, எதிர்வரும் ஏப்ரம் மாதம் முதல் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட அனுமதிக்கப்படுவார். இதன் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவால் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் மார்ச் மாதம் மூன்று லீக் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி மார்ச் 23ஆம் தேதி தங்களுடைய முதல் லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், மார்ச் 29ஆம் தேதி குஜாராத் டைட்டன்ஸ் அணியும், மார்ச் 31ஆம் தேதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் தான் இந்த மூன்று போட்டிகளையும் ஜஸ்பிரித் பும்ரா தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. 

 

மேற்கொண்டு ஜஸ்பிரித் பும்ரா தனது உடற்தகுதியை எட்டும் பட்சத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவார். அப்படி அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் பட்சத்தி, ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணி ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement