சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்தது ஐசிசி! (Image Source: Google)
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிகான நடுவர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்போட்டிக்கான கள நடுவர்களாக பால் ரைஃபெல் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு போட்டியின் மூன்றாம் நடுவராக ஜோயல் வில்சனும், நான்காம் நடுவராக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இல்லிங்வொர்த் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் கள நடுவரகாக செயல்பட்டார்.
அதேசமயம் ரைஃபெல் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியின் நடுவர்களாகவும் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரீகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினரான ரஞ்சன் மதுகல்லே இப்போட்டியின் போட்டி நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை ஐசிசி தங்களின் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்தியா - நியூசிலாந்து அணிகள்
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.
Also Read: Funding To Save Test Cricketநியூசிலாந்து அணி: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், ஜேக்கப் டஃபி, டெவன் கான்வே, மார்க் சாப்மேன், நாதன் ஸ்மித்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News