Advertisement

இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா!

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பிட்ச்சை விட இப்போட்டிக்கான் ஃபிட்ச் நன்றாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா!
இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 05, 2025 • 09:15 AM

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 05, 2025 • 09:15 AM

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களையும், அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 23 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னிலும், அக்ஸர் படேல் 27 ரன்னிலும் விக்கெட்டை இழந்த நிலையில், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த மைதானத்தில் கடைசி பந்து வீசப்படும் வரை, களத்தில் என்ன நடக்கும் என்று எதுவும் உறுதியாகத் தெரியாது பாதியில், அது ஒரு நியாயமான ஸ்கோர் என்று நாங்கள் உணர்ந்தோம். ஆடுகளத்தின் தன்மை உங்கள் ஷாட்களை விளையாட அனுமதிக்காது. நாங்கள் பேட்டிங்கில் கவனமாக இருந்தோம். இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கான பாராட்டுகாள் அணியில் உள்ள அனைவருக்கும் சேரும்.  விராட் கோலி பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். நாங்கள் பேட்டிங் செய்யும்போது, ​​நாங்கள் அமைதியாக இருந்தோம். இறுதியில் ஹார்திக் பாண்டியா விளையாடிய விதம் மிக முக்கியமானதாக இருந்தது. மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பிட்ச்சை விட இப்போட்டிக்கான் ஃபிட்ச் விளையாட நன்றாக இருந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அணியில் தற்போது நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் தற்போது எங்களிடன் ஆறு பந்துவீச்சாளர் தேர்வுகள் மற்றும் இறுதிவரை பேட்டிங் செய்வதற்கான வீரர்கள் என அணி சமநிலையுடன் உள்ளது. அதுதான் எனக்கு வேண்டும். அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் தங்களுக்கு என்ன தேவை என்பது நன்றா தெரியும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement