Advertisement

இந்திய அணியில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை - வெங்கடேஷ் பிரசாத்!

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சோக்கர்ஸ் அணியாக இந்திய உருவாகி உள்ளதா என்ற ரசிகர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 01, 2024 • 13:06 PM
இந்திய அணியில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை - வெங்கடேஷ் பிரசாத்!
இந்திய அணியில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை - வெங்கடேஷ் பிரசாத்! (Image Source: Google)
Advertisement

கோலாகலமாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சிறப்பாக விளையாடி புதிய வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்தியது.

அதன் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஆனால் இதை தவிர்த்து முக்கியமான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுத்ப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய இந்தியா 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

Trending


அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுமாராக விளையாடி கோப்பையை கோட்டை விட்டது. கடைசியாக 2013இல் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக ஏறத்தாழ அனைத்து ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் அரையிறுதி, இறுதிப்போட்டி போன்ற நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 

இதனால் தென் ஆப்பிரிக்கா சோக்கர் என்றால் இந்தியா நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று பாகிஸ்தான் போன்ற எதிரணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அதனால் ஏமாற்றமடைந்த ஒரு இந்திய ரசிகர் “சார் கடந்த 10 வருடங்களில் தொடர்ந்து 10ஆவது முறையாக ஐசிசி நாக் அவுட்டில் தோல்வியை சந்தித்துள்ளதால் நீங்களும் இந்தியா கிரிக்கெட்டின் புதிய சோக்கராக மாறி விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா” என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்திடம் பரிதாபமான கேள்வி எழுப்பியுள்ளார். 

 

அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், “சோக்கர் இல்லை. நாம் ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளோம். குறிப்பாக கடைசியாக 2020/21இல் 36க்கு ஆல் அவுட்டான பின் முதன்மை வீரர்கள் இல்லாத போதிலும் வென்றதை நான் இந்தியாவின் மகத்தான வெற்றியாக கருதுகிறேன். ஆனால் கடந்த 11 வருடங்களாக ஐசிசி போன்ற முக்கியமான தொடர்களில் வெற்றி பெறாமல் இருப்பதில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement