
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரர் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார் . மேலும் ஒரு நாள் போட்டிகளில் ஐசிசி யின் சிறந்த வீரராக தொடர்ந்து இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் விராட் கோலி ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதை தொடர்ச்சியாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 2,600 ரன்கள் குவித்து இருக்கிறார் பாபர் . மேலும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள உள்ள அவர் அதில் எட்டு அரை சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற வருடம் நடந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி வரச் செய்தார்.
எப்போதுமே பாபர் அசாமை இந்திய அணியின் லெஜன்ட் விராட் கோலி உடன் ஒப்பீடு செய்து பார்ப்பது சர்வதேச கிரிக்கெட்டில் சில காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று என்று தெரிவித்திருக்கிறார் .