Advertisement

ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடரில் பங்கேற்கும் 2ஆம் தர இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2023 • 11:25 AM
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை சீனாவில் நடைபெறவுள்ளன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இம்முறை கிரிக்கெட் தொடரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 2010, 2014ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் கிரிக்கெட் தொடர் இடம்பெற்றது. ஆனால், இந்திய அணி அதில் களமிறங்கவில்லை. 

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் ஆகிய இரண்டு அணிகளும் களமிறங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியில் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 2ஆம் தர அணி வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகின.

Trending


குறிப்பாக, ஐபிஎல் 16ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா போன்றவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. இந்த அணியை வழிநடத்த அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதால், ஷிகர் தவனை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்யும் எனக் கருதப்பட்டது.

மேலும் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், உம்ரான் மாலிக் போன்றவர்களும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஜஸ்பரீத் பும்ரா போன்றவர்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனியர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களும் காயம் காரணமாக அவதிப்பட்டால், ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும். ஆகையால்தான், இரண்டாம் தர இந்திய அணியை பிசிசிஐ களமிறக்கவுள்ளது.

அதேபோல், ராகுல் டிராவிட்டும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது பிசியாக இருப்பார் என்பதால், அவருக்கு மாற்றாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மணன் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடரில் பங்கேற்கும் 2ஆம் தர இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் அணியிலும், சாய் கிஷோர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement