Advertisement
Advertisement
Advertisement

மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், ஜார்வோ எனும் ரசிகர் இந்திய வீரர் போல் உடையணிந்து மைதானத்திற்கு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 08, 2023 • 02:50 PM

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 08, 2023 • 02:50 PM

சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டு வீரர்கள் மைதனத்திற்குள் நுழைந்தனர். இப்போது இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக 69 என்ற எண் கொண்ட வீரர் உள்ளே நுழைந்தார்.

Trending

இதனை சூதாரித்த மைதான உழியர்கள் உடனடியாக களத்திற்கு வந்து அந்த நபர் யார் என்று பார்த்தால் அது ஜார்வோ என்பது தெரியவந்தது. இதனால் அவரை மைதானத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, இந்திய வீரர் விராட் கோலியும், ஜார்வோவிடம் ஒருசில வார்த்தைகளை கூறி வெளியேறுமாறு கூறினார்.

 

இதனால் ஜார்வோவை மைதான ஊழியர்கள் குண்டுக்கட்டாக களத்திலிருந்து வெளியேற்றினர். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்தியாவின் சீருடையை அணிந்து கொண்டு சக ஃபீல்டர் போல மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் மைதானத்தில் இருந்த காவலர்கள் மூலம் அவர் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அதேபோல் லீட்ஸில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட்டின் போதும் ஜார்வோ இந்திய பேட்ஸ்மேன் போல ஆடுகளம் வரை சென்றுவிட்டார். காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது ஜார்வோ அடம் பிடித்தபடியே வெளியேற மறுத்தார். இது அப்போது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சென்னை மைதானத்திலும் ஜார்வோ நுழைந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குறிப்பாக இந்நிகழ்வு நகைச்சுவையான தருணமாக பார்க்கப்பட்டாலும் பாதுகாப்புகளை மீறி ரசிகர் ஒருவர் மீண்டும் மீண்டும் மைதானத்திற்குள் நுழைவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் உலகக்கோப்பை போன்று மிகப்பெரும் தொடரில் ரசிகர்கர் ஒருவர் களத்திற்குள் நுழைந்துள்ளது மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement