
Deepika Padukone, Ranveer Singh set to bid for new IPL team (Image Source: Google)
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008லிருந்து ஒவ்வொரு சீசனிலும் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில்(ஐபிஎல் 2022) கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.
அதனால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2 அணிகளில் ஒரு அணி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட அகமதாபாத்தின் பெயரில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்திற்கான அறிவிப்பு வரும்போது, புதிய 2 அணிகள் எந்த ஊரை மையப்படுத்தியவை என்பது தெரியவரும்.