
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையில் மாற்றப்பட்டனர். அதில் முக்கியமாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
மேலும் தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியவை அறிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்படி ரசிகர்கள் ஒருபுறம் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சக வீரர்களான சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, தவால் குல்கர்னி போன்ற வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.