Advertisement

சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 01:29 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 04, 2025 • 01:29 PM

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரீவிஸுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. 

அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை லுங்கி இங்கிடி வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தை டெவால்ட் பிரீவிஸ் எதிர்கொண்டார். அப்போது இங்கிடி லெக் திசையை நோக்கி வீசிய புல்டாஸ் பந்தை எதிர்கொண்ட டெவால்ட் பிரீவிஸ் பந்தை முழுமையாக தவறவிட, அது அவரது பேடில் பட்டது. இதனையடுத்து பந்துவீச்சாளர் இதற்கு அவுட் என அப்பில் செய்ய கள நடுவர் நிதீன் மேனனும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இதனை கவனிக்காத டெவால்ட் பிரீவிஸ் ரன்களை எடிப்பதற்காக ஓடினார். ஆனால் பின்னர் நடுவரின் முடிவை அறிந்த அவர் மேல் முறையிடு செய்வதற்காக மூன்றாம் நடுவரை அனுக முயற்சித்தார். ஆனால் பிரீவிஸ் மேல் முறையீடு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கள நடுவர்கள் அதற்க அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த முடிவின் போது டிஆர்எஸ் டைமர் திரையில் காட்டப்படவில்லை, இதனால் தனக்கு எவ்வளவு குறைந்த நேரம் இருக்கிறது என்பது பிரெவிஸுக்குத் தெரியாது.

இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவும் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர்கள் தங்கள் முடிவில் இருந்து மாறாமல் பிரீவிஸுக்கு மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் இப்போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதன்பின் காண்பிக்கப்பட்ட ரீப்ளேவில் அந்த பந்து ஸ்டம்புகளை முழுமையாக தவறவிட்டது தெரியவந்தது. இதன் காரணமாகவே நடுவரின் தீர்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ஆயூஷ் மாத்ரே 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 77 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement