Advertisement

ஷுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பினால் அவரது இடம் கேள்விகுறி தான் - தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை!

ஷுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan January 01, 2024 • 17:16 PM
ஷுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பினால் அவரது இடம் கேள்விகுறி தான் - தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை!
ஷுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பினால் அவரது இடம் கேள்விகுறி தான் - தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியானது வெளிநாடுகளில் நடைபெற்று வரும் போட்டிகளில் தடுமாறி வருகிறது. 

மேலும் குறிப்பிட்ட சில வீரர்கள் வெளிநாடுகளில் பெருமளவு தடுமாறி வருவதையும் நம்மால் தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறும் ஆட்டத்தில் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

Trending


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் கூட முதல் இன்னிங்சில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். அவரை தவிர்த்து கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் ஷுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில்லின் இடம் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. நிச்சயம் எதிர்பார்ப்புகள் அளவிற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 20 போட்டிகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியும் 30 ரன்களுக்குள் தான் சராசரி வைத்திருக்கிறார். 

எனவே அவரது இடத்தை விரைவில் இழக்க நேரிடும். மேலும் அவரது இடத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகிய இருவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம் விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சர்ஃப்ராஸ் கான் ரன்களை மலை போல் குவித்து வைத்துள்ளார். 

எனவே ஷுப்மன் கில் இடம் அவருக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அதேபோன்று டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரஜப் பட்டிதார் மிகவும் வலிமையான வீரராக பார்க்கப்படுகிறார். அவருக்கும் அந்த இடம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தினேஷ் கார்த்திக் ஷுப்மன் கில்லை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement