
ENG vs IND, 2nd T20I: Virat kohli and Rishabh pant return to the india team made confusion (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாச, சூர்யகுமார் 39 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் எடுத்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 198 ரன்களை விளாச, இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு சுருண்டது.
இந்த நிலையில், பிர்மிங்காமில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். ஏற்கனவே விளையாடி வரும் அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவதால், தற்போது எந்த வீரர்களை நீக்கிவிட்டு சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.