Advertisement

இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது சரியான முடிவு இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் விமர்சித்துள்ளார்.

Advertisement
இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்
இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 01, 2025 • 12:38 PM

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 01, 2025 • 12:38 PM

மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க தவறினர். குறிப்பாக அவர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என இமாலய இலக்கை எட்டியதுடன் வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்திருந்தது. இதனால் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்ததை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல. அவரது பேட்டிங் நன்றாகக் கருதப்பட்டால், அவர் ஒரு துணை சுழற்பந்து வீச்சாளராக இருக்கலாம், இல்லையெனில் விளையாடும் லெவனில் அணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தத் தொடரில் இந்தியா தனது அதிர்ஷ்டத்தை மாற்ற வேண்டுமானால், ஒரு சிறந்த சமநிலையான அணி தேவை. டாப்-ஆர்டர் சரிவுகளுக்கு மாற்று வீரராக பந்து வீசும் கூடுதல் பேட்டர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்ற யோசனையுடன் நான் உடன்படவில்லை. ரன்கள் எடுக்க முதல் ஆறு பேரை நம்பியிருக்க வேண்டும், அதே நேரத்தில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த உகந்த கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை இருக்க வேண்டும்.

Also Read: LIVE Cricket Score

இப்போது தேர்வாளர்கள் அழுத்தத்தில் உள்ளனர். பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களும் ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை எடுக்க ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்கவும் தைரியம் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் தற்சமயம் தேர்வாகள் என்ன முடியை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement