
ENG vs IND: India go to stumps on 187/5, trailing by 209 (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹீத்தர் நைட், பியூமண்ட், சோபியா டாங்க்லி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.
இதனால் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.