
India vs England Lord’s Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் விளையாடவுள்ளார். இதற்காக அவர் தனது பயிற்சிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.