Advertisement

இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

Advertisement
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 15, 2025 • 03:19 PM
India vs England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 15, 2025 • 03:19 PM
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், முன்னாள் இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுற்றுள்ளார்.

அந்தவகையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் 52 ரன்களைக்ச் சேர்க்கும் பட்சத்தில் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எம் எஸ் தோனிக்கு பிறகு 3ஆயிரம் ரன்களைக் கடந்த விக்கெட் கீப்பர் எனும் பெருமையை பந்த் பறவுள்ளார். முன்னதாக எம்எஸ் தோனி 4876 ரன்களைச் சேர்த்துள்ள, ரிஷப் பந்த் 43 போட்டிகளில் 2948 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து ரிஷப் பந்த் மேலும் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனியை பின்னுக்கு தள்ளுவதுடன், மூன்றாவது இடத்தையும் பிடிப்பார். தற்சமயம் எம் எஸ் தோனி 78 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், ரிஷப் பந்த் 73 சிக்ஸர்களுடன் 4ஆம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் வீரேந்திர சேவாக் 91 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

மேற்கொண்டு அவர் ஏழு சிக்ஸர்களை அடிக்க முடிந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 150 சிக்ஸர்களை அவர் நிறைவு செய்வதுடன், இந்திய அணிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடித்த 12ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். அவருக்கு முன் இந்த பட்டியலில் ரோஹித் சர்மா, எம்எஸ் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி, விரேந்திர சேவாக், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் மட்டுமே உள்ளனர். 

ரிஷப் பந்த் குறித்து பேசினால், இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 75 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 2948 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் ஆரம்பத்தில் சோபிக்க தவறிய அவர், இறுதிகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் பி கிருஷ்ணா, ஜஸ்பிரித் தாகூர், ஜஸ்பிரித் தாக்குர் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement