
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்றவாரே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அனிபவ வீரர்கள் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவர்களது எதிர்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வந்ததனர். மேற்கொண்டு அவர்களது இடத்தில் அறிமுக வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்துள்ளது.