
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து ஒரு வீரர் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் காயத்தில் நிலை என்ன என்பது தெரியாததால் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.