
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் அற்புதமாக செயல்பட்ட இங்கிலாந்து அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 30 வருடங்கள் கழித்து பாகிஸ்தானை தோற்கடித்து பழி தீர்த்தது.
இருப்பினும் பாகிஸ்தான் நிர்ணயித்த 138 ரன்களை கட்டுப்படுத்த அந்த அணியின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி உயிரைக் கொடுத்து அற்புதமாக பந்து வீசி கேப்டன் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற முக்கிய வீரர்களை அவுட் செய்து வெற்றிகு போராடியது. ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் இறுதிப்போட்டியில் நிலவிய அழுத்தத்திற்கு அஞ்சாமல் 52 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
அதை விட 2016 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை கொடுத்து தாரை வார்த்த கோப்பையை 6 வருடங்கள் கழித்து அதே இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வென்று கொடுத்த அவரது மன வைராக்கியம் அனைவரது பாராட்டுக்களை பெற்றது.