இங்கிலாந்து ஒருநாள், டி20 அணி கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனுக்கான பரிசீலனையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார்.
Trending
இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட், இளம் அதிரடி வீரர் ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரில் ஒருவருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகசெயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்காக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அதன்பின், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் அவரை மீண்டும் ஒருநாள் அணியில் சேர்ப்பதுடன் கேப்டன் பதவியையும் கொடுக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ, “இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனை நியமிக்கம் பொறுப்பில் எங்களிடம் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்பு வருகிறதென பார்க்க வேண்டும். நான் பார்த்ததிலேயே பென் ஸ்டோக்ஸ் தான் சிறந்த கேப்டன். எனவே அவரை இங்கிலாந்து கேப்டனாக பார்க்காமல் இருப்பது முட்டாள்தனமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு ஜோஸ் பட்லர் குறித்து பேசிய ராப் கீ, “ஜோஸ் பட்லர் ஒரு சிறந்த பேட்டர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். அதுதான் தற்போது எங்களுக்கு தேவை. ஜோஸ் பட்லர் போன்ற ஒரு பேட்டார் நிச்சயம் எங்களுக்கு தேவை. அவர் எவ்வளவு சிறந்த கேப்டனாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு பேட்ஸ்மேனாக உங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை என்றால், அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. மேற்கொண்டு அவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராண்டன் மெக்கல்லமுடம் இணைந்து செயல்பட்டு வருவதன் காரணமாக ஒருநாள் போட்டிகளிலும் இவர்கள் கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now