
India vs England Lord’s Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றிபெற முயற்சிப்போம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இது எப்போதும் ஒரு சிறந்த தொடராகவே இருக்கும். ஏனெனில் இதில் தருணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு சிறந்த அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் முடிவுகள் எப்போது மாறிக்கொண்டே இருக்கும். ஹெடிங்லேவில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், பர்மிங்ஹாமில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.