
இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்கு மிகமுக்கிய காரணமாக யுவராஜ் சிங் பங்காற்றினார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இன்று யுவராஜ் சிங் வருகின்ற உலகக் கோப்பை குறித்தும் இந்திய அணி குறித்தும் நிறைய கருத்துக்களை கூறி வருகிறார். அவருடைய கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் யுவராஜ் சிங் வழக்கமாக விளையாடிய நான்காம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? மகேந்திர சிங் தோனி விளையாடிய ஐந்தாம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்று தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “கேஎல் ராகுல் இப்போது நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. அந்த நிலையில் அவர் விளையாட 15 முதல் 20 ஆட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும். காயத்தில் இருந்து நீண்டு வந்த அவர் ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நூறு ரன்கள் எடுத்தார்.