
Everything Has A Tenure And Time Period: Virat Kohli On Quitting Captaincy (Image Source: Google)
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, இனி டி 20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தப் போவதில்லை என விராட் கோலி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து கோலியை பிசிசிஐ விலக்கியிருந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், டெஸ்ட் போட்டியின் கேப்டன்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கோலி, தென் ஆப்பிரிக்க தொடருடன் அதில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கோலியின் திடீர் முடிவு, அவரது ரசிகர்களை அதிகம் வேதனை அடையச் செய்திருந்தது.