
கடந்த 2019 வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்குப்பின் மோசமான ஃபார்மால் அவதிப்பட்டு வந்த விராட் கோலி, 2022 ஆசிய கோப்பையில் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து டி20 தொடரில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார். ஒருநாள் தொடர்,டி20 தொடர் என அனைத்திலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிய விராட் கோலி, நடந்து முடிந்த 2022 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அனைவரும் தட்டு தடுமாறிய ஆஸ்திரேலிய மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் அடித்து தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை உலகறிய செய்தார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில் சூரியகுமார் யாதவிர்க்கு பிறகு இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.