Advertisement

கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 13, 2023 • 16:50 PM
Ex-England captain Eoin Morgan announces retirement from all forms of cricket!
Ex-England captain Eoin Morgan announces retirement from all forms of cricket! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்பட்டவர் ஈயன் மோர்கன். தற்போது 36 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான். 

பின் 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்று சாதனைப்படைத்தது.

Trending


ஆனால் அதன்பின் அவரது ஃபார்ம் கேள்விக்குறியானதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் எஸ்ஏ 20 லீக் கிரிக்கெட் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறூவதாக ஈயன் மோர்கன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ஈயன் மோர்கன் கூறுகையில், “அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு இது. நான் நேசிக்கும் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுவே சரியான நேரம். 2005-ல் மிடில்செக்ஸ் அணியில் தொடங்கியது முதல் SA20 லீகில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது வரை களத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்.

எல்லா விளையாட்டு வீரர்களை போலவும் எனது கரியரில் ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. அனைத்து நேரங்களிலும் என் குடும்பத்தினரும், நண்பர்களும் துணையாக இருந்துள்ளனர். குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என்னை ஒரு வீரராக மாற்றிய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. உலக அளவில் உள்ள ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடியது மறக்க முடியாத பல நினைவுகளை எனக்கு கொடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிந்தது. வரும் நாட்களில் அதை தொடர்ந்து செய்வேன் என நம்புகிறேன்.

நான் களத்தில் விளையாடதான் விடை கொடுத்துள்ளேன். ஆனால், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்ந்து நான் பயணிப்பேன். அது வர்ணனையாளராக, வல்லுனராக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement