Advertisement
Advertisement
Advertisement

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!

எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு மிகவும் பசியுடன் காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார்.

Advertisement
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2024 • 08:59 PM

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடரானது இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கொண்டு இதில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2024 • 08:59 PM

இதில் ஏற்கெனவே இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் மூன்றாவது முறையாகவும் இத்தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. அதேசமயம் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது. 

Trending

இதனால் இந்த தொடர் தொடங்க சில மாதங்கள் உள்ள நிலையிலேயே அந்த அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனும் இணைந்துள்ளார். இத்தொடர் குறித்து பேசியுள்ள நாதன் லையன், “கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது.

அதிலும் குறிப்பாக எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு மிகவும் பசியுடன் காத்திருக்கிறோம். என்னை தவறாக எண்ண வேண்டாம், இந்தியா ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் அணி மற்றும் மிகவும் சவாலானது, ஆனால் விஷயங்களை மாற்றியமைத்து கோப்பையை நாங்கள் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய நான் மிகவும் பசியாக இருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமான அணியாக இருந்தது போல் உணர்கிறோம், நாங்கள் ஒரு சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியாக மாறுவதற்கான பயணத்தில் இருக்கிறோம். நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். மேலும் இம்முறை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எதிர்கொள்ள இருக்கிறோம். 

இதுவரை நான் அவரை களத்தில் சந்திக்கவில்லை, அதனால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அவர் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய விதத்தை, நான் அதை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தேன்.  நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான். இதன் காரணமாக இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளே. அதில் அவர் தனது திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

நான் கிரிக்கெட்டைப் பற்றி மற்ற வீர்ர்களுடன் பேச விரும்புவேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய ஒருவருடன் என்னால் பேச முடிந்தால், எனக்குத் தெரியாத ஒன்றை அவர்களிடம் இருந்து கற்க முடியும். ஏனெனில் கிரிக்கெட் குறித்து நமக்கு தெரியாத விசயங்கள் பிறருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நாம் ஆதரிப்பதுடன், அதிலிருந்து நம்மாலும் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement