
டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக பணிபுரிகிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு வந்ததுடன் முதல் முறையே சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல், “ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.
இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.