
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக தனது முத்திரையை பதித்துள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்பாடுகள் வெளிவரவில்லை. இதனால் அவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், அவர் தற்சமயம் இந்தியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாட சூர்யகுமார் யாதவ் முடிவுசெய்துள்ளார். முன்னதாக இத்தொடருக்கான மும்பை அணியில் அவர் முதலில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் தாமாக முன்வந்து இத்தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பு கிட்டத்திட்ட முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேரியர் கிட்டத்திட்ட முடிவுக்கு வந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துள்ளதாக நான் நினைக்கிறேன்.