Advertisement

மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!

இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 29, 2025 • 08:17 PM

Oval Test: ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 29, 2025 • 08:17 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து இன்றைய தினம் இந்திய அணி வீரர்கள் ஓவல் மைதானத்தில் தங்களது பயிற்சியைத் தொடங்கினர். அப்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டடனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்திய அணி பயிற்சிக்காக ஈரமான ஆடுகளம் வழங்கப்பட்டதாகவும், அதனால் மாற்று பிட்சை ஏற்பாடு செய்ய கோரிய நிலையில் ஃபோர்டிஸ் அதனை மறுத்தாகவும் கூறப்படுகிறது. 

அதன்பின் ஐந்தவது டெஸ்ட் போட்டிக்காக தயார் செய்த பிட்ச்சை பயிற்சியாளர்கள் பார்வையிட சென்ற போது, ஃபோர்டிஸ் அவர்களிடன் இரண்டரை மீட்டர் தள்ளி நின்று மேற்பார்வையிடும் படி கூறியாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கௌதம் கம்பீர் “நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கூறாதீர்கள். நீங்கள் வெறுமனே பிட்ச் பராமரிப்பாளர் மட்டுமே, அதைத் தாண்டி எதுவுமில்லை” என ஃபோர்டிஸை ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்தினார். மேலும் இதுகுறித்த காணொளிகளும் இணையத்தில் வெளியாகி சார்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோடக், "நாங்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர்களின் ஊழியர்களில் ஒருவர் எங்களை இரண்டரை மீட்டர் தொலைவில் நிற்கச் சொன்னார்.

Also Read: LIVE Cricket Score

நாங்கள் அப்போது ஸ்பைக் காலணிகள் எதுவும் அணியவில்லை. மேலும் ஆடுகளத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் செய்யவில்லை. இதற்காக நாங்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார். தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி முன் கௌதம் கம்பீர் பிட்ச் பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதுடன், இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports