
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டும் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
அந்தவகையில் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட முதல் தொடரிலேயே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கையிடம் இந்திய அணி மண்ணைக்கவ்வியது. பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி அந்த தொடரி வென்று சாதித்தது.
இந்நிலையில் தான் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதான்மூலம்12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷும் ஆனதால். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.