ஆஸ்திரேலிய அணி தற்சமயம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆக்டோபர் 29ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கிளென் மேக்வெஸ்ல் கடைசி மூன்று போட்டிகளிலும், பென் துவார்ஷுயிஸ் கடைசி இரண்டு போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சீன் அபோட் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக ஒருநாள் தொடரை தவறவிட்ட ஜோஷ் இங்கிலிஸ் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாவில்லை. இதன் காரணமாக ஜோஷ் பிலீப் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸாம்பா, மேத்யூ ஷார்ட் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.