
ஆஸ்திரேலியா அணி இந்தியா வருவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-3 என இழந்தது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயமாக தொடரில் முதல் இரண்டு போட்டிகளை அபாரமாக வென்று, கடைசி மூன்று போட்டிகளை மிக மோசமாக ஆஸ்திரேலியா தோற்று தொடரை இழந்தது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களில் பாதிக்கு மேல் யாரும் காயத்தால் இடம் பெறவில்லை. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை நடைபெற இருக்கும் இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா திட்டமிட்டது.
ஆனால் ஆஸ்திரேலியாவின் முயற்சிகள் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக தோற்று தொடரை இழந்தது. இதையடுத்து நேற்று மூன்றாவது போட்டியில் திரும்பி வந்த ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றி பெற்றதோடு உலக கோப்பைக்கு நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது.