
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள்யும், நசீம் ஷா 40 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.
அதன் பின்னர் 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோஷ் இங்கில்ஸ் 49 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பட் கம்மின்ஸ் 32 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.