Advertisement
Advertisement
Advertisement

இங்கிலாந்து அணியை விட உள்ளூரில் நல்ல பவுலர்கள் உள்ளனர் - ஹர்பஜன் சிங்!

இங்கிலாந்து அணியை விட முதல் தர கிரிக்கெட்டில் கூட இதைவிட சிறந்த பந்துவீச்சை நாம் பார்க்கிறோம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 22, 2023 • 12:30 PM
இங்கிலாந்து அணியை விட உள்ளூரில் நல்ல பவுலர்கள் உள்ளனர் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணியை விட உள்ளூரில் நல்ல பவுலர்கள் உள்ளனர் - ஹர்பஜன் சிங்! (Image Source: Google)
Advertisement

நேற்று மும்பை மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஹென்றி கிளாசன் மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளி விட்டார்கள்.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியை தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் அதிரடியாக 170 ரன்களுக்கு சுருட்டி விட்டார்கள். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. நேற்றைய படுதோல்வி இங்கிலாந்து அணிக்கான இந்த உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை மிகவும் மங்கலாக்க செய்திருக்கிறது. 

Trending


இனி அவர்கள் எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டும் மேலும் நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் கடுமையாகவும் தாக்கி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து வீசிய லென்த் மிகவும் மோசமாக இருந்தது. அவை யார்க்கர் மற்றும் ஷார்ட் பந்துகள் என்று இல்லை. பேட்டர்களுக்கு அடிப்பதில் எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை. நாங்கள் வலையில் பந்துவீச்சாளர்கள் சிக்ஸர் அடிக்க வீசுவது போல வீசினார்கள். முதல் தர கிரிக்கெட்டில் கூட இதைவிட சிறந்த பந்துவீச்சை நாம் பார்க்கிறோம். இங்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது. உங்கள் லென்த்தை கொஞ்சம் தவற விட்டால் கூட பந்து மைதானத்துக்கு வெளியே செல்கிறது. 

நீங்கள் கோணங்களை பயன்படுத்தி வீசவில்லை. மேலும் யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகளையும் வீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் நிறைய சிக்கல் இருப்பதாக நான் உணர்கிறேன்.தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசி 15 ஓவருகளுக்கு எங்கு பந்து வீசுவது என்று தெரியாத அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மாற்றினார்கள். அவர்களுடைய ஹிட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு பந்து தவறாக வீசப்பட்டாலும் வெளியே அடித்தார்கள். அவர்களைப் புகழ வார்த்தைகள் இல்லை” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement