
இன்னும் சில தினங்களில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், உலகக்கோப்பையில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? அதிக ரன்கள் குவிக்க போகும் வீரர் யார்? அதிக விக்கெட்டுகள் கைப்பற்ற போகும் வீரர்? அரையிறுதிக்கு செல்ல போகும் அணிகள் எது? என்பது குறித்தான தனது கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் என்றும், குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றுவார் என்றும், ரோஹித் சர்மா அதிக சிக்சர்களை விளாசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.