1-mdl.jpg)
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். எனினும் இந்திய அணி அரைஇறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது . இந்த நிலையில் இந்திய அணியில் டி20க்கு தனி அணியாகவும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு என்று தனி அணியையும் உருவாக்க வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இறங்கி உள்ளது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், “டி20 கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டை விட நெஹ்ராவுக்கு தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஏனென்றால் டி20 கிரிக்கெட் கடந்த 15 ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. முதலில் 170 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கு போதுமானதாக இருக்கும். தற்போது அதனை 16 வது ஓவரிலே வீரர்கள் எட்டி விடுகின்றனர். இதனால் ஆசிஸ் நெஹ்ரா, டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.
இதனால் தான் சொல்கிறேன் நெஹ்ராவுக்கு டி20 கிரிக்கெட் குறித்து நிறைய தெரியும். நான் டிராவிட்டை அவமரியாதையாக பேசவில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன். டிராவிட்டும் , நெஹ்ராவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார்கள். டிராவிட்டுக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும். ஆனால் டி20 கிரிக்கெட் கொஞ்சம் கடினமான விளையாட்டாகும். இதில் சமீபத்தில் யார் விளையாடினார்களோ அவர்கள் தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார்கள்.